ஓய்வு ரத்து: டெல்லியில் அவசரக் கூட்டம்- விரைகிறார் வாஜ்பாய்
டெல்லி:
ஹிமாச்சல் பிரதேசத்தில் மணாலியில் ஓய்வெடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய் தனது ஓய்வை ரத்து செய்துவிட்டுநாளை டெல்லி விரைகிறார்.
தனது இல்லத்தில் தேசிய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் கூட்டத்தையும் அவர் அவசரமாகக்கூட்டியுள்ளார்.
இதில் எல்லை நிலவரம குறித்தும் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை குறித்தும் விவாதிக்கப்படும்.
நாட்டின் உணவு கையிருப்பு, எரிபொருள் கையிருப்பு, பொருளாதார நிலை ஆகியவை குறித்தும் இதில்விவாதிக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும்ராணுவத் தளபதி பத்மநாபன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளை நடக்கும் கூட்டத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ராணுவ உளவுப் பிரிவினர், ரா, ஐ.பி. உளவுப்பிரிவின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
அணு சக்திக் கமிஷனுடன் தான் நடத்திய ஆலோசனைகள் குறித்து பிரிஜேஷ் மிஸ்ரா முப்படைத் தலைவர்களிடம்விளக்குவார்.












Click it and Unblock the Notifications