கூந்தன்குளத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
கூந்தன்குளம்:
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானபறவைகள் வரத் தொடங்கியுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே கடைசி வாரத்தில் சீசன் தொடங்கும்.இதையடுத்து ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா , ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமானபறவைகள் இங்கு வருகை தரும்.
இந்த ஆண்டுக்கான சீசனும் தற்போது தொடங்கி விட்டது. கண்ணாடி வாயன் உள்ளிட்ட பல்வேறு வகையானபறவைகள் இங்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் பறவைகள் வந்துள்ளன. வேறு சிலநாடுகளிலிருந்தும் பறவைகள் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுப் பறவைகள் ஏராளமான அளவுக்கு வரத் தொடங்கியுள்ளதையடுத்து சுற்றுலாப் பயணிகளும் அதிகஅளவில் கூந்தன்குளத்தில் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.