வாக்குப்பதிவு அமைதியாக நடக்கிறது: போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டையில் மிக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து வருவதாக காவல்துறை ஆணையர்விஜய்குமார் கூறினார்.
தொகுதி முழுவதும் சுற்றி வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தொகுதியை சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். இதுவரை எந்த வன்முறையும் இல்லை. மிக அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. நீங்களே (நிருபர்களே) நிலைமையை பார்த்திருப்பீர்கள்.
ஆங்காங்கே வழக்கமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அடிதடி சம்பவங்கள் ஏதும் இல்லை. மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
பாத்திமா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்குவிரைந்த விஜய்குமார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications