தேர்தல் வெற்றி: ஜெ. பெருமிதம்- கருணாநிதி மீது பன்னீர் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாணியம்பாடியும், அச்சிறுப்பாக்கமும் எப்போதுமே அதிமுகவின் கோட்டைகள் தான் என்பது இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் மீண்டும் நிரூபணமாகிவிட்டதாக முதல்வரும் அதிமுக பொதுச் செயாளருமான ஜெயலலிதாகூறினார்.

இந்த வெற்றி குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

அச்சிறுப்பாக்கத்தைப் பொறுத்தவரை பா.ம.கவினர் அவர்களாகத் தான் கூட்டணியை முறித்துக் கொண்டுபோனார்கள். கடந்த முறை அதிமுக ஆதரவுடன் தான் அவர்கள் வென்றார்கள். கூட்டணியில் இருந்துவெளியேபோய் இப்போது பெரும் தோல்வியை சந்தித்தி இருக்கிறார்கள்.

இந்த இரு தொகுதிகளும் இப்போது மட்டுமல்ல, எப்போதும் அதிமுகவின் கோட்டைகள் தான் என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.

பன்னீர் பாய்ச்சல்:

இதற்கிடையே தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய திமுக தலைவர்கருணாநிதியைக் கண்டித்து அமைச்சர் பன்னீர்செல்வம் மூலமாக அதிமுக காட்டமான அறிக்கை விட்டுள்ளது.அதில்,

அதிமுக மீது கருணாநிதி இல்லாததையும் பொல்லாததையும் கூறி வருகிறார். போலீஸ் அதிகாரிகளைதோட்டத்துக்கு அழைத்து அதிமுக எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டதாக கருணாநிதி பொய்க் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் கீழ்தரமான பொய்கள் மூலம் குறுகிய அரசியல் லாபம் தேட அவர் விளைகிறார். சைதாப்பேட்டையில்கருணாநிதி மறுதேர்தல் கோருவது நேர்மையான தேர்தல் விதிமுறைகளில் அவர் நம்பிக்கை இழந்துவிட்டதையும்,அவரது கோழத்தனமான அரசியலையும் தான் காட்டுகிறது என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+