முஷாரபை சந்திக்காமல் நெருக்குதலை முறியடித்தார் வாஜ்பாய்
அல்மாட்டி (கஜாகிஸ்தான்):
பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபை சந்திக்க வைக்க ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வாஜ்பாயையும் முஷாரபையும் சந்திக்க வைக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. பிரிட்டனும் இந்தமுயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யா மூலமாக பேச்சுவார்த்தைக்கு இந்த இருநாடுகளும் நிர்பந்தித்தன. எந்தவிதமான நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைத் தயார் என முஷாரப் அறிவித்தார்.இதன்மூலம் இந்தியத் தாக்குதலை தடுத்துவிடலாம் என முஷாரப் கணக்குபோட்டார். மாநாடு நடக்கும்கஜாகிஸ்தானின் அதிபரும் வாஜ்பாயை பேச்சுவார்த்தைக்கு நெருக்கினார்.
ஆனால், தீவிரவாதிகளை அனுப்பி வரும் முஷாரபுடன் யார் சொன்னாலும் பேச்சு நடத்த மாட்டேன் என பிரதமர்வாஜ்பாய் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் புடின் உள்பட அனைவரது முயற்சிகளும்தோல்வியடைந்தன.
மேலும் இந்த எல்லையில் இருந்து படைகளையும் வாபஸ் பெற மாட்டோம் எனவும் வாஜ்பாய் அனைவரிடமும்தெரிவித்துவிட்டார்.
ரஷ்ய அதிபருடன் சந்திப்பு:
இதையடுத்து வாஜ்பாயையும் முஷாரைபயும் ரஷ்ய அதிபர் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார்.
மாநாட்டு தொடங்குவதற்கு முன் புடின் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையே தினந்தோறும் தாக்குதல் நடந்துவருகிறது. இது மிகுந்த கவலையளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய ரஷ்யா தயார்.
தீவிரவாதத்தை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார் புடின்.
சீன அதிபர் ஜியாங் ஜெமினும் வாஜ்பாயை சந்திக்கிறார்.
ஐ.நா. தலையிட வேண்டாம்: ரஷ்யா
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க ஐ.நாவில் தீர்மானம் ஏதும் நிறைவேற்ற வேண்டியஅவசியம் இல்லை என ரஷ்யா கருத்துத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பேசி பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இதில் ஐ.நா. தலையிட வேண்டாம் எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் 3வது நாடோ அமைப்போ தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை. இதையடுத்துஇந்தியாவின் நிலையை ஆதரித்து ரஷ்யா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளை அமெரிக்கா கண்காணிக்கும்:
இந் நிலையில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைவது நின்றுவிட்டதா என்பதை நாங்களே நேரடியாகக்கண்காணிப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.தீவிரவாதிகள் தடுக்கப்பட்டது உறுதியாகிவிட்டால், அதன் பின்னர் இந்தியா நிச்சயம் பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட், துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் ஆகியோர் இந்தவாரம் இந்தியா, பாகிஸ்தானுக்கு வரவுள்ளனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக தீர்மானம்:
இதற்கிடையே அல்மாட்டியில் நடந்து வரும் 16 நாடுகள் ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் இன்று தீவிரவாதத்துக்குஎதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய, ரஷ்ய நாடுகளின் கோரிக்கையின்பேரில் இந்தத் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இதில் தீவிரவாத்தை எதிர்க்காத நாடுகளை (பாகிஸ்தான்) கண்டித்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications