தமிழகம் பீகாராக மாறி வருகிறது: பா.ஜ.க.
பெரம்பலூர்:
தமிழகம் பீகாராக மாறிக் கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார்.
பெரம்பலூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்த அரசின் அடாவடி செயல்களால் ஜனநாயகத்தின் மீதே மக்கள் நம்பிக்கை இழந்துவிடும் அபாயம்ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
சைதாப்பேட்டையில் நடந்த மறு தேர்தலில் சாதிச் சான்றிதழைக் காட்டி வாக்களிக்க முடியாது என தேர்தல் கமிஷன்அறிவித்தது. இதன் மூலம் முதலில் நடந்த வாக்குப் பதிவுன்போது கள்ள ஓட்டுகள் போடப்பட்டதுஉறுதியாகிவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வரும்போது தந்த வாக்குறுதிகள் எதையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை என்றார் கணேசன்.
கடந்த இரு வாரங்களாக திமுக- பா.ஜ.க. இடையில் இருந்து வந்த பனிப் போர் மறைய ஆரம்பித்துள்ளது. பிரதமர்வாஜ்பாயுடன் திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் பேசியதாகவும் இதையடுத்து இரு தலைவர்களும்கட்சிகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் திமுகவை திட்டி வந்த கணேசன் பல்டி அடித்து ஜெயலலிதாவை திட்ட ஆரம்பித்துள்ளார். முதலில்தீவிரமாக திமுகவை ஆதரித்த கணேசன் பின்னர் அதிமுக ஆதரவு நிலை எடுத்தார்.
டெல்லியுடன் கருணாநிதி நேரடியாக பேசியதையடுத்து தமிழக பா.ஜ.கவினரின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications