புலிகள் மீதான தடையை நீக்கும் பணி தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தாய்லாந்தின் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கஆரம்பித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தடை நீக்கத்துக்கான வழிவகைகள் இன்று முதல் அமலாக்கப்பட்டுவதாக அந் நாட்டின் அரசியல் சட்டவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கூறினார். இன்னும் 10 நாட்களில் தடை முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும்என்றார் அவர்.
இதன்மூலம் இழுபறியாகிவந்த புலிகள்- அரசு பேச்சுவார்ததைகள் இம் மாத இறுதியில் அல்லது அடுத்த மாதஆரம்பத்தில் துவங்கும் என்று தெரிகிறது.
தங்கள் மீதான தடையை விலக்கினால் தான் பேச்சு என புலிகள் திட்டவட்டமாக அறிவித்திருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications