காவிரி நீர் கோரி இ. கம்யூ. உண்ணாவிரதம்
தஞ்சாவூர்:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றுகோரி தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம்நடந்தது.
கடந்த மே 31ம் தேதி வரை வந்து சேர வேண்டிய 205 டி.எம்.சி. நீர் முழுவதையும் காவிரியிலிருந்து கர்நாடக அரசுதிறந்து விடவில்லை என்று ஏற்கனவே தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமானபன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் 205 டி.எம்.சிக்கு மேலாகவே காவிரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருப்பதாகக் கர்நாடக அரசுகூறிவிட்டது.
இந்நிலையில் காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின் படி கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியிலிருந்து தண்ணீர்திறந்து விட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். தஞ்சை மற்றும் காவிரி பாசனப் பகுதியில் வாடிக்கொண்டிருக்கும் குறுவைப் பயிருக்குத் தேவையான காவிரி நீரை உடனடியாக அம்மாநிலம் திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications