மேயர் பதவி: ஸ்டாலின் ராஜினாமா இல்லை - கருணாநிதி உறுதி
சென்னை:
சென்னை மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் அதிமுக அரசு கொண்டு வந்துள்ளஒருவருக்கு ஒருவர் சட்டத்தை திமுக மதிக்கவில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாககூறியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை நல்லது தான். ஆனால் ஸ்டாலின் என்ற தனி நபரை மனதில் வைத்துக்கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கிறது.
ஸ்டாலின் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். ஆட்சியாளர்கள் அவரது பதவியைப் பறித்தால்சந்தோஷம் தான் என்றார் கருணாநதி.
இதற்கு ஜெயலலிதாவும் கடுமையான முறையிலேயே பதில் அளித்துள்ளார். இந்தச் சட்டத்திற்கு ஆளுநரும்ஒப்புதல் அளித்து விட்டார். அதைப் புறக்கணித்தால் சட்டத்தில் கூறியுள்ளபடி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் தனது இரு பதவிகளையும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிச் செய்தால்மேயர் பதவி பறிபோகும். ஆனால் இந்த சட்டம் கோர்ட்டுக்குப் போனால் நிற்காது என்று திமுக அசாத்தியமாகநம்புகிறது. ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவியைப் பறித்தால், அதன் பிறகு கோர்ட்டை அணுக திமுக முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் பதவியை ஒரு சட்டத்தின் மூலம் பறிக்கும் வகையில் இந்தியாவில் எங்குமேசட்டம் இல்லை.
கர்நாடக மாநிலத்தில் இதுபோல முன்பு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் கோர்ட்டில் அந்தசட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவேதமிழகத்திலும் நடக்கும் என்று திமுக கூறி வருகிறது.