தூத்துக்குடி துறைமுகத்தில் போர் ஒத்திகை
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகத்திலும் கடல் பகுதியிலும் இன்று போர் ஒத்திகை நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் இருப்பதால் தூக்குக்குடி உள்பட நாட்டின் அனைத்துதுறைமுகங்களுக்கும் முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் கப்பல்கள் இந்த துறைமுகங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் தூத்துக்குடி துறைமுகம் இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது. கடற்படை, கடலோரக் காவல்படை, தமிழக போலீசார், தீயணைப்புப் படையினர் ஆகியோர் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.
இந்த போர் ஒத்திகைக்காக இந்திய கடற்படையின் தாக்குதல் கப்பலான ஐ.என்.எஸ். சுன்யா தூத்துக்குடிவந்துள்ளது.
துறைமுகம் தாக்கப்பட்டால் கப்பல்களை உடனடியாக அப்புறப்படுத்துவது, காயமடைந்தவர்களை உடனடியாஅப்புறப்படுத்துவது, அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது, சைரன்கள் மூலம் எச்சரிக்கை செய்வது ஆகியவைகுறித்தும் இன்று ஒத்திகை பார்க்கப்படும்.
தாக்குதலை சமாளிப்பது மட்டுமின்றி தாக்குதலை தடுக்கும் ஒத்திகையிலும் கடற்படை ஈடுபடவுள்ளது.துறைமுகத்தில் இருந்து விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்துவது போன்ற ஒத்திகையும் நடத்தப்படவுள்ளது.
இந்த போர் ஒத்திகையையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications