சிறையில் அல்-உம்மாவின் மதமாற்ற முயற்சி: கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் மோதலாக வெடித்தது.கைதிகள் இரு பிரிவினராக பிரிந்து பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் உள்பட பலமுஸ்லீம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அடைக்கப்பட்டுள்ள பிற மதத்தைச் சேர்ந்த கைதிகளைமுஸ்லீமாக மாற்ற அவர்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாக கடந்த சில காலமாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.

அதை நிரூபிக்கும் வகையில் பன்னீர்செல்வம் என்ற கைதி சமீபத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாறினார். மேலும்அல்-உம்மா கைதிகளுடன் அவருக்கு நல்ல பழக்கமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) பன்னீர் செல்வம் திடீரென்று நெற்றியில் குங்குமத்துடன் காணப்பட்டார்.இதைப் பார்த்த அஷ்ரப் என்ற அல்-உம்மா கைதி, அது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாககுங்குமத்தை அழி என்றும் பன்னீர்செல்வத்தை அவர் அதட்டினார்.

இதுதொடர்பாக பன்னீருக்கும் அஷ்ரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பன்னீர்ஆதரவு கைதிகளும், அல் உம்மா கைதிகளும் கைகலப்பில் இறங்கினர்.

இரு தரப்பினரும் சிறைச்சாலைக்குள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பயங்கர மோதல் நடந்தது. கையில் கிடைத்தபொருள்களைக் கொண்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். பலருக்கு மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது.

மேலும் சிலர் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து சிறையில் காவல் இருந்த போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றனர். உடனடியாகரிசர்வ் போலீசாருக்கு தகவல் பறந்தது.

சுமார் 500 பேர் கொண்ட ரிசர்வ் போலீஸ் படை சிறைச்சாலையில் நுழைந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தகைதிகள் மீது தடியடி நடத்தியது. இதன் பின்னர் தான் மோதல் முடிவுக்கு வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+