திமுகவினர் மீது பொய் வழக்குகள்: கருணாநிதி புகார்
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நடந்த முறைகேடுகளை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை என்றுகூறியும் திமுகவினர் மீது போலீசார் பொய் வழக்குகள் போட்டு வருவதாகக் கூறியும் சென்னையில் வரும் 18ம்தேதி பெரும் போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
ஆற்காடு வீராசாமி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடக்கும் என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்டசமாக நடந்து கொள்கிறது. போலி சாதிச் சான்றிதழ், போலி ரேசன் கார்டுகளைக்காட்டி ஓட்டு போட வந்தவர்களை திமுகவினர் பிடித்தனர். அந்த போலி ஆவணங்களையும் தேர்தல் கமிஷனிடம்சமர்பித்தனர்.
ஆனால், அதை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை. ஜனநாயகத்தை குழு தோண்டி புதைத்து வரும்அதிமுக அரசுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் நடந்து கொள்கிறது.
ஆண்டிப்பட்ட தேர்தலிலேயே அதிமுகவினர் அராஜகத்தை ஆரம்பித்துவிட்டனர். அப்போதே அதை நாம் சுட்டிக்காட்டினோம். ஆனால், அதிமுகவினரோடு சேர்ந்து தவறு செய்த தேர்தல் அதிகாரிக்கு வக்காலத்து வாங்குவதலில்தான் தேர்தல் கமிஷன் கண்ணும் கருத்துமாக இருந்தது.
அந்தச் சம்பவம் கொடுத்த தைரியத்தில் தான் சைதாப்பேட்டையிலும் அராஜக தாண்டவம் ஆடியிருக்கின்றனர்ஆளும் கட்சியினர்.
கள்ள ஓட்டுப் போட வந்தவர்கள் குறித்தும் அராஜகம் செய்தவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கொடுக்கச் சென்ற திமுகவினர் மீது கொடுமையான சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஆட்சியாளர்களின் இந்த அடக்குமுறையை எதிர்த்து சென்னையில் ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது என்றுகருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications