பாக். அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கராச்சி:

பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது குண்டுகள் ஏற்றப்பட்ட கார் மோதியது. அப்போது நடந்த பயங்கரகுண்டு வெடிப்பில் 8 பேர் இறந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். கராச்சியில் இந்தச் சம்பவம் நடந்தது.

இதையடுத்து பாகிஸ்தானில் தனது தூதரங்களை மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வெள்ளை நிற கார் தூதரகத்தின் சுவரில் வந்து மோதியது. இதில் கார் தூள் தூளானது.அதை ஓட்டி வந்த தீவிரவாதியும் சிதறினான்.

நேற்று தான் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இஸ்லாமாபாத்தில் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷரபுடன் பேசிவிட்டு வாஷிங்டன் திரும்பினார். இந் நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் செல்வதைத் தடுக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்க பல வழிகளில்நெருக்கி வருகிறது. இதனால் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவரவாதிகள் இப்போது அந் நாட்டு அரசுக்கே எதிராக கிளம்பியுள்ளனர். முஷாரப்போடும் கட்டுப்பாடுகளை முறியடிப்பது என்ற முடிவில் உள்ளன. தங்களை கட்டுப்படுத்தும் அரசை எதிர்த்துதாக்குதல் நடத்துவோம் என இந்த அமைப்புகள் எச்சரித்திருந்தன.

இந் நிலையில் கராச்சியில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தல் இந்த தற்கொலைப் படை குண்டுவெடிப்புநடந்துள்ளது. குண்டுகள் ஏற்றப்பட்ட காருடன் வந்து அந்தத் தீவிரவாதி தூதரகத்தின் சுவரில் மோதினான்.

காரும் குண்டுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த இடத்திலேயே 8 பேர் இறந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில்சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பின் சத்தம் பல கி.மீ. தூரத்துக்குக் கேட்டது.

இந்த வெடிப்பில் தூதரக கட்டடமும் சேதமடைந்தது. தூதரகத்தின் ஜன்னல்களும் சிதறின. சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து. சாலையில் இருந்த கார்கள் தூக்கி எறியப்பட்டன. 10க்கும் மேற்பட்ட கார்கள் நொறுங்கிவிட்டன. பலமோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாயின. காயமடைந்தவர்களில் 6 பேர் அமெரிக்க தூதரக ஊழியர்கள்.

குண்டுவெடிப்புக்குப் பின் அந்த இடம் முழுவதும் உடல்கள் சிதறிக் கிடந்தன. சம்பவம் நடந்தவுடன் அமெரிக்கப்படையினர் தூதரகத்தை சுற்றி வளைத்துவிட்டனர்.

அல்-கொய்தா தீவிரவாதிகளைத் தேடி ஏற்கனவே அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானில் உள்ளனர்.

சமீப காலமாக பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. சிலமாதங்களுக்கு முன் பிரஞ்ச் தூதரக ஊழியர்களின் சர்ச் மீது நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இப்போதைய குண்டு வெடிப்பு அல்-கொய்தா தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று கராச்சி போலீசார்கூறினர்.

இந்தச் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் உள்ள தூதரகங்கள், அமெரிக்கன் சென்டர் ஆகியவற்றை உடனடியாகமூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+