For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் பதவி பறிப்பை எதிர்த்து வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் மேயர் பதவியை பறிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி எம்.பி. அல்லதுஎம்.எல்.ஏவாக இருப்பவர்கள் வேறு பதவியை வகிக்கக் கூடாது என்று இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டம் சென்னை மேயராகவும், எம்.எல்.ஏவாகவும் உள்ள ஸ்டாலினைக் குறி வைத்தே கொண்டுவரப்பட்டுள்ளதாக பேச்சு உள்ளது. அதை உறுதி செய்வது போல ஸ்டாலினுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பிவிரைவில் ஒரு பதவியை ராஜினாமா செய்யவும் தமிழக உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 18ம் தேதிதான் இதற்குக் கடைசி நாளாகும். அதற்கு அடுத்த நாள் அவரது ஏதாவது ஒரு பதவி பறிக்கப்படும்.

இந்த நிலையில் ஸ்டாலின் பதவி பறிப்பு சட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன் என்பவர்உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. வரும் திங்கள் கிழமை இந்த மனு மீதான விசாரணை தொடங்குகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X