For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி ஆணையத்தை புறக்கணிப்போம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரி நதி நீர் ஆணையத்தால் எந்தவிதமான பயனும் இல்லாததால் அந்த அமைப்பை இனிமேல் புறக்கணித்துவிடதமிழகம் முடிவு செய்துள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக காவிரிநடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பையும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் கர்நாடகம் தமிழத்துக்கு உரிய நீரை தர மறுத்து வருகிறது.இதனால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

இனிமேல் கர்நாடகத்திடம் பேசிப் பயன் இல்லை என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தவிவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயத்தைப் பெற்றுத் தர முடியாத அதிகாரமில்லாத அமைப்பாக காவிரி நதி நீர்ஆணையம் இருப்பதால் அந்த அமைப்பிலிருந்து விலகி விடவும் முடிவு செய்யப்பட்டது.

இனி இந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களை தமிழகம் புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. காவிரிநடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் இந்த ஆணையம் திணறி வருகிறது. இதனால், இந்தஆணையத்தை இனியும் தமிழகம் நம்பத் தயாராக இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X