நோயாளியிடம் லஞ்சம் கேட்டு தொல்லை: மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் காட்டிய 6பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சமீபத்தில் ஒருவர் வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்கொண்டு வரப்பட்டார்.
அவரை சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்வதில் அங்கு பணிபுரியும் 6 ஊழியர்கள் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டுள்ளனர். சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்வதற்கு பணம் கேட்டுத் தகராறு செய்தனர். பின்னர் பிச்சைக் காசு வாங்கிக்கொண்டு தான் அவர்கள் அந்த நோயாளியை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை டீனிடம் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை திடத்த டீன் உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின் பணியில் அலட்சியம் காட்டிய அந்த 6 ஊழியர்களையும் இடைநீக்கம் செய்து டீன் உத்தரவிட்டார்.