வேலூர் நகராட்சியில் நுழைந்து டெண்டர் பெட்டியை உடைத்து அதிமுகவினர் அராஜகம்
வேலூர்:
வேலூர் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த டெண்டர் பெட்டியைஉடைத்து அதிமுகவினர் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க் கட்சியினர் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
வேலூர் நகராட்சிக்குச் சொந்தமான 5 கடைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் அதற்காகடெண்டர்கள் கோரப்பட்டன. இதற்கான பெட்டி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
யார் அதிக விலைக்கு ஏலம் எடுக்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு இந்தக் கடைகளை ஒதுக்க நகராட்சிதிட்டமிட்டிருந்தது.
முதலில் இருந்தே ஏலத்தை எதிர்த்து வந்த அதிமுகவினர் கடைகளை நேரடியாக தங்களுக்கே ஒதுக்க வேண்டும்என்று நிர்பந்தித்தனர். ஆனால், அதையும் மீறி ஏலம் நடத்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இதையடுத்து நேற்று இந்தப் பெட்டியில் டெண்டர்களைப் போட வந்த பலரையும் அதிமுகவினர் நகராட்சிக்குவெளியிலேய தடுத்து நிறுத்தினர். கத்தி, அரிவாள்களைக் காட்டி மிரட்டி திருப்பி விரட்டினர்.
இந்த மிரட்டல்களையும் மீறி 17 பேர் கடைகளை ஏலம் எடுக்க போட்டியில் கலந்து கொண்டு டெண்டர்களைபெட்டியில் போட்டனர்.
இதனால் கடுப்பான அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து டெண்டர் பெட்டியில் சீலை உடைத்துஎறிந்தனர். 17 பேர் போட்ட டெண்டர்களை எடுக்க முயன்றனர்.
இதையறிந்த திமுக, தமாகா, இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவினரைமுற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் நகராட்சி அலுவலகத்திலேயே உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.போலீசார் வந்து எதிர்க் கட்சியினரை விரட்டினர். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்எழுந்தது.
இதையடுத்து இந்தக் கடைகளுக்கான ஏலத்தை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக நகராட்சி ஆணையர்ராஜசேகரன் நாயர் அறிவித்தார்.
டெண்டர் பெட்டி உடைக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் நகராட்சி புகார் தந்துள்ளது. ஆனால், அதில்அதிமுகவினர் யாருடைய பெரும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தவறு செய்த அதிமுகவினரைக் காப்பாற்ற நகராட்சி அதிகாரிகள் முயல்வதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications