முகத்தில் தேனீக்களுடன் கார், பைக் ஓட்டும் வாலிபர்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரி இளைஞர் தன்னுடைய முகம் முழுவதும் தேனீக்களை ஒட்டவைத்துக் கொண்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் விரைவாகச் சென்று சாதனை படைத்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கம்ப்யூட்டர்பட்டதாரியான இவர் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்த போதிலும்தேனீக்களை வளர்ப்பதில் நீண்ட காலமாகவே ஆர்வம் கொண்டுள்ளார்.
இந்தியத் தேனீக்கள் விரைவில் இறந்து விடும் என்பதால் அவர் இத்தாலியில் உள்ள "மெலிபேனா" என்ற வகைத்தேனீக்களைத் தற்போது வளர்த்து வருகிறார்.
இந்தத் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் தேனை எடுத்து விற்பனையும் செய்து வருகிறார் ஜெயக்குமார்.
நீண்ட காலமாகவே தேனீக்களுடன் வாழ்ந்து பழக்கப்பட்டுப் போய்விட்டதால் அவர் இந்தத் தேனீக்களைக்கொண்டே சாதனை படைக்க நினைத்தார்.
அதன்படி இந்த இத்தாலியத் தேனீக்களைத் தன்னுடைய முகத்திலேயே ஒட்ட வைத்தார் ஜெயக்குமார். அவருடையநீண்ட கால முயற்சிக்குப் பிறகு அவருடைய முகத்தைச் சுற்றிலும் தேனீக்கள் நன்றாக ஒட்டிக் கொண்டன.
முகத்தைச் சுற்றிலும் மட்டுமல்லாமல் அவருடைய கழுத்து, தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதி வரை அந்தத் தேனீக்கள் ஆக்கிரமித்தன.
இவ்வாறு தலையிலிருந்து மார்பு வரை தேனீக்களை நிரப்பிக் கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் வரைதேனீக்களின் ரீங்காரத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியவற்றை விரைவாக ஓட்டி அவர் சாதனைபடைத்தார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி மார்பு வரை தேனீக்களை ஒட்ட வைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வலம் வரும் ஜெயக்குமார், விரைவில் தன்னுடைய உடல் முழுவதும் தேனீக்களை ஒட்ட வைத்துக்கொண்டு சாதனை படைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
தேனீக்களால் தனக்கோ அல்லது தன்னால் இந்தத் தேனீக்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லைஎன்று கூறும் ஜெயக்குமாரை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.