குற்றால அருவியில் பெண்களுடன் "நைட்டி" அணிந்து குளித்த வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்:

குற்றால மெயின் அருவியில் பெண்கள் பகுதியில் "நைட்டி" உடையை அணிந்து குளித்துக் கொண்டிருந்தவாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாகவே குற்றாலத்தில் சீசன் தொடங்கி அனைத்து அருவிகளிலும் தண்ணீர்பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் இங்கு அலைமோதத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (29) என்ற வாலிபரும் குற்றால சீசனை அனுபவிப்பதற்காகதன் நண்பர்களுடன் வந்திருந்தார்.

இந்த நண்பர்கள் அனைவருமே பயங்கரமான "கிளுகிளு" பேர்வழிகள். அருவியில் பெண்கள் பகுதியில் சென்றுகுளிக்க யாருக்காவது "தில்" உண்டா என்று அதில் ஒருவர் கேட்டார். உடனே "ஜொள்ளு" பார்ட்டியான கிருஷ்ணன்,தான் அதற்குத் தயார் என்று முன் வந்தார்.

உடனே குற்றாலத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பெண்கள் அணியும் "நைட்டி" ஒன்றையும் நண்பர்களுடன்சென்று வாங்கி வந்து அணிந்து கொண்டார் கிருஷ்ணன்.

பின்னர் தலை முடியை வைத்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு துண்டைத்தலையில் போர்த்திக் கொண்டு மெயின் அருவியின் பெண்கள் குளிக்கும் பகுதியில் நுழைந்து குளிக்கஆரம்பித்தார்.

குளித்ததோடு நின்று விடாமல் அங்கிருந்த பெண்களின் கையைப் பிடித்து இழுத்தும் கட்டி அணைத்தும் தகாதமுறையில் நடந்துள்ளார். அவர்களும் "பெண் தானே" என்று நினைத்து விட்டு விட்டனர்.

இந்நிலையில் திடீரென்று உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகவே, "நான் ரெடி, குளிக்க நீங்க ரெடியா?" என்று பாடஆரம்பித்தார் கிருஷ்ணன். இதையடுத்தே அவர் ஆண் என்று பெண்களுக்குத் தெரிய வர, அவர்கள் பெரும்அதிர்ச்சியடைந்து உடனே கூக்குரல் எழுப்பினர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த பெண் போலீசார், "நைட்டி"யுடன் குளித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனைவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

மெயின் அருவியில் ஆண்கள் பகுதிக்கும் பெண்கள் பகுதிக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உண்டு. இந்தச்சுவரின் மேல் நின்று கொண்டு எப்போதும் ஒரு போலீசார் இதுபோன்ற "கிளுகிளு" ஆசாமிகளை லத்தியாலே"கவனிப்பது" வழக்கம்.

ஆனால் இந்த வாலிபர் "நைட்டி"யை அணிந்து கொண்டு பெண்கள் பகுதிக்கே சென்று குளித்து போலீசுக்கே"அல்வா" கொடுத்து விட்டார்.

பின்னர் அவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இது தொடர்பாக விசாரித்த நீதிபதிதட்சிணாமூர்த்தி, கிருஷ்ணனுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். இத்தொகையைக் கட்டவில்லை என்றால் 3 மாதம்சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கிருஷ்ணனுடைய நண்பர்கள் சேர்ந்து அபராதத் தொகையைக் கட்டி அவரை மீட்டுக் கொண்டுவந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+