வேலை பார்த்த வீட்டில் 30 பவுன் திருடிய பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலை பார்த்த வீட்டிலேயே 30 பவுன் நகைகைளத் திருடிய வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா நகர் ஏ.எல்.பிளாக்கில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது வீட்டில் சமீபத்தில் 30 பவுன்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த எம்.ஜி.ஆர். காலனியைச்சேர்ந்த பச்சையம்மாளைக் கைது செய்தனர். இவர் திருடி வந்த நகைகளில் 2 பவுனை இவரது கணவர் தாமோதரன்அடகுக் கடையில் வைத்துள்ளார்.
மீதமிருந்த 28 பவுன் நகைகள் பச்சையம்மாளின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
பச்சையம்மாள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications