அக்டோபர் வரை படை வாபஸ் இல்லை: பெர்னாண்டஸ்
அகமதாபாத்:
காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முடியும் வரை எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற மாட்டோம் என்றுபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
அகமதாபாத்தில் தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி.) நடத்திய தேசிய நல்லிணக்க முகாமில் கலந்துகொள்வதற்காக இன்று வந்திருந்த பெர்னாண்டஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் இன்னும் ஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போதுஎல்லை தாண்டி வரும் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எனவே தேர்தல் முழுவதும் அமைதியாக நடந்து முடியும் வரை ராணுவத்தினர் வாபஸ் என்ற பேச்சுக்கேஇடமில்லை.
அதன் பிறகும் கூட அப்போது நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே படைகளை விலக்குவது குறித்து யோசித்து தான்முடிவெடுப்போம்.
தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவது குறித்து எப்போதும் போல் முன்னுக்குப் பின் முரணாகவே பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் பேசி வருகிறார். அவரை நம்பவே முடியாது என்றார் பெர்னாண்டஸ்.