2 மாதமாகியும் மதிப்பெண் பட்டியல் கிடைக்காத எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரு மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் ஒரு பள்ளியின்மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் பட்டியல்கள் தரப்படவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவ- மாணவிகள் குழம்பிப் போயுள்ளனர்.

சென்னை பெரம்பூர் எபினேசர் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய 55 எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள்தான் இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர்.

இவர்களது பெயரை பள்ளி நிர்வாகம் சேர்க்கைப் பட்டியலில் (Admission list) சேர்க்கவில்லை என்று தெரிகிறது.ஆனால், இவர்களது பெயர் வருகைப் பதிவேட்டில் (Attendence register) சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களின் பெயர்கள் சேர்க்கைப் பட்டியலில் இல்லாததால் இவர்களுக்கு எப்படி மதிப்பெண் பட்டியல்தருவது என்று தெரியவில்லை. விதிமுறைப்படி தர இயலாது என்று பள்ளிக் கல்வி இயக்குனரத்தின் துணைஇயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறியுள்ளார்.

சேர்க்கைப் பட்டியலில் இல்லாத மாணவர்களின் பெயர்களில் சான்றிதழ் தருவது எப்படி என்று கல்விததுறைகுழம்பிப் போயுள்ளது.

ஆனால், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என பள்ளியின் தாளாளர் கிருஸ்துதாஸ் கூறியுள்ளார். இதைஎதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், உயர் கல்வியில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த 55 மாணவர்களும் எதிர்காலத்தைநினைத்து கலங்கிப் போய் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+