10ம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கு உடனடி மறு தேர்வு: புதன்கிழமை நடக்கிறது
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சியில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் உடனடியாக மறுதேர்வுஎழுத இன்று முதல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த உடனடி மறு தேர்வு மூலம் மாணவர்கள் ஓராண்டு காலத்தை வீணடிப்பதைத் தவிர்க்கலாம். இந்த மறு தேர்வில்பாஸ் ஆகிவிட்டால் உடனே பிளஸ் ஒன் சேர முடியும்.
இந்தத் திட்டம் முதலில் பிளஸ் டூ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு பாடங்களில்தோற்றவர்கள் உடனே மறுதேர்வு எழுதி கல்லூரியில் சேர வாய்ப்பு தரப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியிலும்பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து 10ம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கும் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த மறு தேர்வுகள்வரும் புதன்கிழமை நடக்கவுள்ளன.
இதற்கு பதிவு செய்து கொண்டவர்களுக்கு இன்றும் நாளையும் அந்தந்த தேர்வு மையங்களில் ஹால் டிக்கெட்டுகள்வழங்கப்படுகின்றன.
-->












Click it and Unblock the Notifications