கோட்டையில் இன்னொருவர் விஷம் குடித்தார்
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 50 வயது நபர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலை முயற்சிகள் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளன. நேற்றும் ஒருதற்கொலை முயற்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால்வேலையில்லாமல் இருந்த காரணத்தால் கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லை.
இவரது மகள் சிவில் என்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ளார். அவரும் வேலை தேடிக் கொண்டிருந்தார். இதனால்சென்னை வந்த ராஜமாணிக்கம் தனது மகளுக்கு வேலை தரக் கோரி முதல்வர் அலுவலகத்தில் மனுகொடுத்திருந்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் இதேபோல மனு கொடுத்திருந்தார். ஆனால் எந்தப பலனுமகிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ராஜமாணிக்கம் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்திற்கு வந்தார். கோட்டைவளாகத்திற்குள் நுழைந்த அவர் தனது கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்த அவரது வாயிலிருந்து நுரை தள்ளத் தொடங்கியது.
இதையடுத்து அவரை அங்கிருந்த போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-->












Click it and Unblock the Notifications