விமானங்கள் மோதல்: சுவிஸ் மீது ரஷ்யா புகார்
யூபெர்லிங்கன் (ஜெர்மனி):
ஜெர்மனியில் நேற்று முன்தினம் நடுவானில் விமானங்கள் மோதிக் கொண்டதற்கு சுவிஸ் விமானத்துறைஅதிகாரிகளின் அலட்சியமே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
சுவிஸ்- ஆஸ்திரிய எல்லையில் பறந்தபோது தான் ரஷ்ய பயணிகள் விமானமும் டி.எச்.எல். கூரியர் நிறுவனத்தின்போயிங் சரக்கு விமானமும் நேருக்கு நேர் நடுவானில் மோதின. இதில் 44 குழந்தைகள் உள்பட 71 பேர்பலியாயினர்.
விபத்து நடந்தபோது இந்த விமானங்களும் சுவிஸ் விமானக் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பில் இருந்தன.ரஷ்ய விமானத்தின் உயரத்தை குறைக்கச் சொல்லி பலமுறை சுவிஸ் கட்டுப்பாட்டு அறை ஆணையிட்டதாகவும்ஆனால், அதை ரஷ்ய விமானிகள் காதில் வாங்கவில்லை என்றும் சுவிஸ் கூறியுள்ளது.
கடைசி நேரத்தில் இரு விமானங்களின் விமானிகளும் எதிரே இன்னொரு விமானம் வருவதைப் பார்த்து வழியைமாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.
நேற்று பகலில் ரஷ்ய விமானத்தில் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் டி.எச்.எல். நிறுவனத்தின் பிளாக்பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இவை இன்று சோதனையிடப்படவுள்ளன.
இந்த விபத்து குறித்து ஆராயவும், கருப்புப் பெட்டி மற்றும் பிளைட் வாய்ஸ் ரெக்கார்டரை ஆராயவும் ரஷ்ய,அமெரிக்க நிபுணர் குழுக்கள் ஜெர்மனி வந்துள்ளன.