வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் திரட்டும் உளவுப் பிரிவினர்
மதுரை:
தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டு காலமாக வைகோவும் மதிமுகவினரும் பொதுக் கூட்டங்களில் பேசியபேச்சுக்கள் குறித்த விவரங்களைத் திரட்டும் பணியில் தமிழக உளவுப் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆடியோ கேசட்டுகளையும் வீடியோ கேசட்டுகளையும் திரட்டும் முயற்சியில் போலீசார்ஈடுபட்டுள்ளனர். மதிமுக நிகழ்ச்சிகளைப் படம் பிடித்த வீடியோ நிறுவனங்களில் போலீசார் அதிரடியாக நுழைந்துகேசட்டுகளைத் திரட்டி வருகின்றனர்.
அதே போல பிற வழக்குகளில் சிக்கியுள்ள மதிமுக தொண்டர்களைப் பிடித்து மிரட்டி வைகோவின் பேச்சுக்கள்அடங்கிய ஆடியோ கேசட்டுகளை கலெக்ட் செய்து வருகின்றனர்.
பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள், இலக்கியக் கூட்டங்களிலும் வைகோ புலிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாகவும்அந்தக் கேசட்டுகளும் பறிமுதல் செய்யப்படும் என மூத்த காவல்துறை அதிகாரியொருவர் கூறினார்.
வைகோவை சிறையில் தள்ளும்பட்சத்தில், அவர் மீதான நடவடிக்கையை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்காக இந்தக்கேசட்டுகளை போலீசார் கைப்பற்றி வருகின்றனர்.