ஆப்கான் துணை அதிபர் சுட்டுக் கொலை:

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானின் துணை அதிபரான ஹாசி அப்துல் காதிர் நேற்று அடையாளம் தெரியாத 2 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஜலாலாபாத் நகரின் ஆளுநராகவும் இருந்த அப்துல்காதிர், நேற்று தன்னுடைய அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்டார்.

அப்போது திடீரென்று 2 மர்ம நபர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சராமாரியாகச் சுட்டனர். மொத்தம் 36ரவுண்டுகள் வரை அவர்கள் சுட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் அப்துல் காதிரும் அவருடைய டிரைவரும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த சுவரில் மோதி நின்றது. இந்தத் துப்பாக்கிச் சூடுசம்பவத்தில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட அப்துல் காதிர், நார்த்தர்ன் அலையன்சைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஆப்கானிஸ்தானின்பழங்குடியான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவராவார். ரஷ்ய ராணுவத்தை ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்துவிரட்டியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

தலிபான் தீவிரவாதிகள் தான் அப்துல் காதிரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஆப்ாகானிஸ்தான் அமைச்சரவை பதவியேற்ற பிறகு கொலை செய்யப்பட்ட 2வதுஅமைச்சர் அப்துல் காதிர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுத் துவக்கத்தில் மெக்கா செல்லக் காத்திருந்த பயணிகள் விமானம் வருவதற்கு மிகவும் தாமதமானதால்அங்கு வந்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல் ரகுமானை அடித்தே கொன்று விட்டனர் என்பதுநினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+