தமிழகம் முழுவதும் 252 புதிய பஸ்கள் அறிமுகம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 252 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதாஇன்று வழங்கினார்.
மொத்தம் 1,500 பஸ்கள் வழங்கப்படவுள்ளன. சென்னையில் இன்று ஜெயலலிதா 60 புதிய பஸ்களை இயக்கிவைத்தார். இதில் 9 பஸ்கள் புகை வெளியிடாத நவீன என்ஜின்களைக் கொண்டவை.
தமிழகம் முழுவதிலும் பழுதான நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களை படிப்படியாக மாற்றவும் அரசு முடிவுசெய்தது.
இதற்கான நடவடிக்கைகளும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அதன்படி முதற்கட்டமாக தமிழகம்முழுவதும் உள்ள பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இன்று 252 புதிய பஸ்கள் வழங்கப்பட்டன.
சென்னை தீவுத் திடலில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா இந்த பஸ்களை இயக்கி வைத்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன், போக்குவரத்துக் கழகங்களின் தலைவர் மற்றும் செயலாளர்கற்பூரசுந்தர பாண்டியன் மற்றும் அரசு உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications