திருச்சி மாநகராட்சியில் திமுக- த.மா.கா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் திமுக மற்றும் காங்கிரஸ்- த.மா.கா. கவுன்சிலர்கள் இடையே கடும் மோதல் நடந்தது.
திருச்சி மாநகராட்சி தமிழ் மாநில காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அக் கட்சியைச் சேர்ந்த சாருலதா தொண்டைமான் தான்மேயராக உள்ளார். த.மா.காவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்து வருகிறது.
ஆனால், கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் திமுகவினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.
இன்று காலை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் தொடங்கிய போது திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். திமுகபெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலை அணிந்து வந்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன், சென்னை மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டதைத் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரினர்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் த.மா.கா. கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்ச் சண்டை ஏற்பட்டது. பெண் திமுக கவுன்சிலர்கள் கூட்டமாகப் போய் மேயரின்இருக்கை முன் அமர்ந்து மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் திமுகவை எதிர்த்து கோஷம்போட்டனர்.
இரு தரப்பினரும் நா கூசும் வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இந்தக் கூச்சல் குழப்பத்தால் அவைக்கூட்டத்தை மேயர் சாருலதா தொண்டைமான் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications