போலீசார் என்னை உளவு பார்க்கின்றனர்: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
பாதுகாப்பு என்ற பெயரில் உடன் வரும் போலீசார் தன்னை உளவு பார்ப்பதாக திமுக இளைஞரணித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலினிடம் இருந்த மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து தர்மபுரியில் கண்டனக் கூட்டம் நடந்தது. அதில் ஸ்டாலின் பேசுகையில்,
நான் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தமிழக அரசு முடக்கிவிட்டது. மேயர் பதவி போனதால் மக்களுக்கு சேவையாற்றஇயலவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது.
ஆனால், இப்போது தான் கட்சிப் பணியாற்ற கூடுதல் நேரம் கிடைக்கிறது.
எனக்கு பாதுகாப்பு தருவதாகக் கூறிக் கொண்டு உடன் வரும் போலீசார் என்னைப் பற்றியும் எனது நடவடிக்கைகள் குறித்தும் உளவு பார்த்துதமிழக அரசுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர் என ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications