For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் பிடிபட்டது: திருச்சி ஆர்.டி.ஓ. ஊழியர்களுடன் தொடர்பா?

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 21 புத்தம் புதியயமஹா, ஹீரோ ஹோண்டா, சுசூகி மோட்டர் சைக்களிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும்.

அவர்களிடம் இருந்து திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் போலி ரப்பர் ஸ்டாம்புகள், போலி ஆர்.சி. புத்தகங்கள் ஆகியவையும்கைப்பற்றப்பட்டன.

சமீப காலமாக திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு மிக அதிகமாகிவிட்டது. இதையடுத்து திருடர்களைப் பிடிக்க தனிப் படைகளைபோலீஸ் கமிஷ்னர் நியமித்தார்.

இந்தப் படையினர் ரகசியமாக கண்காணித்தபோது தாமஸ் ராபர்ட் (29), சங்கர் (39) ஆகியோர் சிக்கினர்.

இவர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற போலீசார் நன்றாக கவனித்தனர். அடி தாங்க முடியாத இந்த இருவரும் பைக்குகள்திருடியதை ஒப்புக் கொண்டனர்.

இந்த பைக்குகளை இவர்கள் காவிரி நதிக்குள் உள்ள குளியலறையில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்தக்குளியலறையில் சோதனை நடத்தியபோது அங்கு 21 புத்தம் புதிய பைக்குகள் இருந்தன.

இவற்றை திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் ஆகிய இடங்களில் இவர்கள் திருடியுள்ளனர். இந்த இருவருடன் மேலும் பலபேருக்கும் பைக் திருட்டில் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது.

அந்தக் குளியல் அறையில் திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் போலி ரப்பர் ஸ்டாம்புகள், போலி ஆர்.சி. புத்தகங்கள், பதிவுப் பத்திரங்கள்ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. திருடிய வாகனங்களுக்கு புதிய எண்ணையும் அதற்கான ஆர்.சி. புத்தகத்தையும் இந்தக் கும்பலேதயாரித்துக் கொடுத்துள்ளது.

இந்தக் கும்பலுக்கும் திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து விசாரிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X