ஜெ. நாளை ராமநாதபுரம் வருகை: ராமேஸ்வரத்தில் தீவிர கண்காணிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா நாளை ராமநாதபுரம் செல்கிறார். இதையடுத்துராமேஸ்வரத்திலும், ராமநாதபுரத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை காலை சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார்.

அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதகாதி கல்லூரி அரங்கில் ரூ. 300 கோடி செலவில் பல்வேறு அரசுத் திட்டங்களைஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதில் முக்கியமான திட்டம் ரூ. 140 கோடியிலான மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல்பாதுகாப்புத் திட்டமாகும்.

மேலும் மீனவர்களுக்கான உதவித் திட்டம், ராமநாதபுரம் குடிநீர் திட்டம், கிராமப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தையும் ஜெயலலிதாநாளை தொடங்கி வைக்கிறார்.

புலிகளுக்கு உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அவர் ராமநாதபுரம் வருவதால் ராமேஸ்வரத்தில்மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் ராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளார். க்யூ பிராஞ்ச் போலீசாரும் உளவுப் பிரிவினரும்ராமேஸ்வரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையினருடனும் ஐ.ஜி. ஆலோசனை நடத்தினார். இதையடுத்துகடல் பகுதியிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கடலோரக் காவல்படைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வருகையை ஒட்டி ராமநாதபுரத்தில் அதிமுகவினர் வரவேற்பு வளைவுகளையும், பிரம்மாண்டமானபோஸ்டர்களையும் ஒட்டி அமர்களப்படுத்தி வருகின்றனர். பெரிய கட்-அவுட்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

அவர் பயன்படுத்தவுள்ள சாலைகளில் தார் கொட்டப்பட்டு மேக்-அப் போடப்பட்டு வருகிறது.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+