ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு போன ரூ.40 கோடி!!
ஈரோடு:
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக அவனுக்கு ரூ.40 கோடி வரைகொடுக்கப்பட்டதாகவும் அதில் ரூ.10 கோடியை ராஜ்குமாரின் மகன்களே கொடுத்துள்ளதாகவும் ஈரோடுநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் கூறினார்.
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் "நக்கீரன்" ஆசிரியர் கோபால் மற்றும் அதன் நிருபர் சிவசுப்பிரமணியம்ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு உள்பட வேறு பல வழக்குகள் தொடர்பாக சிவசுப்பிரமணியம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 6ம் தேதி ஈரோடுமாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சிவசுப்பிரமணியத்துக்கு ஜாமீன் கேட்டு 2வது முறையாக சமீபத்தில் அவருடைய வக்கீல் மோகன்அதே நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நீதிபதி தமிழ்வாணன் முன் இந்த மனு மீதான விசாரணைநடந்தது.
ராஜ்குமார் கடத்தலுக்கு சிவசுப்பிரமணியமும் காரணம் என்று இதுவரை போலீசார் நிரூபிக்கவில்லை என்றுவாதாடிய அவருடைய வக்கீல் மோகன், இதனால் கடந்த 63 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரைஉடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரான சங்கர நாராயணன் தன் வாதத்தின் போதுகூறுகையில்,
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கோபாலுக்கும் சிவசுப்பிரமணியத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறுதகவல்கள் கிடைத்துள்ளன.
ராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ.40 கோடி வரை வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.10கோடி வரை ராஜ்குமாரின் மகன்களே கொடுத்துள்ளனர்.
ராஜ்குமாரின் மகன்கள் கொடுத்த இந்த ரூ.10 கோடியை கோபால் தான் கொண்டு போய் வீரப்பனிடம்கொடுத்துள்ளார். இதற்கு சிவசுப்பிரமணியமும் உதவியாக இருந்துள்ளார்.
எனவே சிவசுப்பிரமணியத்தை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்றார் சங்கர நாராயணன்.
இதற்குப் பதிலளித்த வக்கீல் மோகன், ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணம் கை மாறியிருப்பதாக தற்போதுதான் அரசு தரப்பில் முதல் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு வழக்கறிஞர் அறிவித்த இந்தவிவரம் குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் சங்கர நாராயணன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்ட ரகசியவிசாரணையின் போது தான் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த விவரத்தைப் பதிவு செய்தால்போலீசார் விசாரணையில் தடங்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதை இப்போது பதிவு செய்ய வேண்டியஅவசியமில்லை என்றார்.
ஆனால் இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்வாணன், கோபால் மூலம் ரூ.10 கோடி வீரப்பனுக்குக்கைமாறிய விவரம் குறித்து அரசு வழக்கறிஞர் கூறிய கருத்தைப் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதி தமிழ்வாணன் ஒத்திவைத்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications