""காவிரி ஆணையத்துக்கு உயிருள்ளதை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது"": கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி ஆணையத்துக்கு உயிர் இருப்பதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், காவிரிகண்காணிப்புக் குழு ஆகஸ்டு 12க்குள் கூடி ஆய்வு செய்து காவிரி ஆணையத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக கருணாநிதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி ஆணையத்திற்கு உயிர் இருப்பதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் காவிரி ஆணைத்தை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பதில் கூறும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications