மதுரை: வக்கீல்கள் செய்யும் முத்திரைத் தாள் மோசடி
மதுரை:
மதுரையில் வக்கீல்களே போலி முத்திரைத் தாள்களைப் பயன்படுத்தி பல கிரிமினல்களை விடுதலை செய்யவைத்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
போலி முத்திரைத் தாள்களை அச்சிடுவது, விற்பது, வாங்குவது ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பற்றிபொதுமக்களே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நேற்று தான் தமிழக அரசு அறிவித்தது.
இதன் எதிரொலியாக மதுரை போலீசார் இது தொடர்பாக தங்கள் முதல் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்திலேயே அவர்கள் மதுரையில் உள்ள வக்கீல்களை நோக்கி தங்கள் பார்வையைத்திருப்பியுள்ளனர்.
போலி முத்திரைத் தாள்களைப் பயன்படுத்தி உத்தரவாதப் பத்திரங்களைக் (ஷ்யூரிட்டி) கொண்டு வரும்குற்றவாளிகளை வக்கீல்கள் விடுவித்து வருவதாகப் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மதுரையில் உள்ள பல முத்திரைத் தாள் வியாபாரிகள்போலியாக முத்திரைத் தாள்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும் இந்த முத்திரைத் தாள்களில் பயன்படுத்தப்படும் வருவாய்த் துறை அலுவலகங்களின் ரப்பர் ஸ்டாம்ப்சீல்களையும் இந்த வியாபாரிகளே தயாரித்து வைத்துள்ள விவரமும் தெரிய வந்துள்ளது.
இந்த போலி முத்திரைத் தாள்களில் எழுதப்படும் உத்தரவாதப் பத்திரங்களை உண்மையானதாகக் காட்டிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பல குற்றவாளிகளை விடுவித்த சம்பவங்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு பல கிரிமினல் குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் போலீசார் ஏராளமான போலி முத்திரைத் தாள்களையும் போலி ரப்பர்ஸ்டாம்ப்புகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த போலி முத்திரைத் தாள்கள் விற்பனைக்கு மதுரையைச் சேர்ந்த 21 வக்கீல்களும் கூட உடந்தையாக இருந்தனர்என்ற விவரமும் போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வக்கீல்கள் பயன்படுத்தும் முத்திரைத் தாள்களை சோதனையிட அனுமதிக்குமாறு கோரி மதுரைமாநகர முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications