For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை காமராஜர் பல்கலையில் ராகிங்: 6 எம்.சி.ஏ. மாணவிகள் விடுதியிலிருந்து நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் முதலாண்டு மாணவிகளை ராகிங் செய்த 6 எம்.சி.ஏ.மாணவிகளை விடுதியிலிருந்து நீக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்காக மல்லிகை, முல்லை மற்றும் தாமரை ஆகிய மூன்றுவிடுதிகள் உள்ளன.

இவற்றில் ஒரு விடுதியில் பெரும்பாலும் எம்.சி.ஏ. மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

இவர்களில் 2வது ஆண்டு படிக்கும் ஆறு எம்.சி.ஏ. மாணவிகள் சமீபத்தில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டுஎம்.சி.ஏ. படிக்கும் சில மாணவிகளை ஒரு அறைக்குள் போட்டு பூட்டி வைத்து ராகிங் செய்தனர்.

நீண்ட நேரமாக அறைக்குள் பூட்டி வைத்த பின்னரே தங்கள் ஜூனியர்கள் அந்த 2வது ஆண்டு எம்.சி.ஏ.மாணவிகள் திறந்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவிகள் விடுதி வார்டன் மற்றும் பல்கலைக்கழகப்பதிவாளர் ஆகியோரிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.ராகிங் செய்த ஆறு மாணவிகளின் பெற்றோர்களும் பல்கலைக்கழகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைநடத்தப்பட்டது.

விசாரணையின் போது அந்த ஆறு மாணவிகளும் தங்களுடைய தவறை ஒப்புக் கொண்டு ராகிங் செய்ததற்காகவருத்தமும் தெரிவித்தனர். மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து அந்த ஆறு மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் அவர்களைவிடுதியிலிருந்து மட்டும் நீக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ராகிங் செய்த அந்த ஆறு மாணவிகளும் விடுதியை விட்டு வெளியேறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X