திருச்சி ராகிங் கொலை: 3 கூலிப்படையினர் கைது
திருச்சி:
திருச்சியில் கடந்த வாரம் ராகிங்கைக் கண்டித்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 3பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நகரில் உள்ள ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரியில் ராகிங்கை தட்டிக் கேட்ட அழகர்சாமி என்ற கல்லூரிமாணவர் கடந்த 24ம் தேதி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பிரதீப், ஆனந்தகுமார் மற்றும்ஆறுமுகம் ஆகிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களுடன் சில கூலிப் படையினரும் சேர்ந்து கொண்டு தான் அழகர்சாமியைக் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இதையடுத்து இந்தக் கூலிப் படையினரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதையடுத்து பல திருட்டு வழக்குகளில் தண்டனை பெற்ற கூலிப் படையைச் சேர்ந்த சுரேஷ் (22) என்பவனைப்போலீசார் கைது செய்தனர்.
இவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவனுடைய நண்பர்களான பிரதாப் (20) மற்றும் இப்ராஹிம் (19)ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். காஜாமலை மத்திய தானியக் கிடங்குப் பகுதியில் ஒளிந்துகொண்டிருந்த இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த இந்தக் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவன் செல்வகுமார் என்பவன்ஏற்கனவே தலைமறைவாகி விட்டான். அவனைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications