அண்ணன் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் அண்ணன் இறந்த சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே உள்ளது புழல். இங்குள்ள அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் திடீரென இறந்துவிட்டார். அதிலிருந்து அவருடைய தங்கை சுமதி தன் அண்ணன் இறந்ததையே நினைத்து நினைத்து சோகமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் எல்லோரும் வெளியில் சென்ற நேரமாக பார்த்து சுமதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications