நெசவாளர்களுடன் கஞ்சி அருந்தப் போகும் கருணாநிதி
சென்னை:
நெசவுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து கஞ்சி அருந்தி போராட்டம் நடத்த திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் வேலையில்லாமல் வாடி வரும் நெசவுத் தொழிலாளர்களுக்கு பொது மக்கள் கஞ்சித் தொட்டிகள் அமைத்து உணவுவழங்கி வருகின்றனர். இது போன்ற கஞ்சித் தொட்டிகளை அமைக்க திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கஞ்சித் தொட்டிகள் அமைத்துள்ளனர். ஆனால், இதற்குப் போட்டியாக பிரியாணிதருகிறோம் என்று சொல்லி நெசவாளர்களின் பட்டினியை கேலிக்குறியதாக்கி வருகின்றனர் சில அதிமுகவினர்.
இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களின் பசி, பஞ்சக் குமுறல்களைக் கேட்டு கோபப்படுபவர்கள் தான் இன்று ஆட்சியாளர்களாக உட்கார்ந்து கொண்டுள்ளார்கள். பட்டினிகிடக்கும் தொழிலாளர்களுக்கு திமுக கஞ்சி வழங்கினால், பிரியாணி வழங்குவதாக அதிமுக கூறுகிறது. திமுகவால் கஞ்சி தான் வழங்கமுடியும்.
ஆனால், இப்படி போட்டி போட்டுக் கொண்டு நெசவாளர்களுக்கு பொன்னும் பொருளும் கிடைத்தால் அது எனக்கு மகிழ்ச்சி தான்.
நெசவாளர்கள் சந்தித்து வரும் பசிக் கொடுமையை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்ல நானே அம்பையார்குப்பத்திற்குச் சென்று அங்குநெசவாளர்களுடன் சேர்ந்து கஞ்சி அருந்த உள்ளேன் என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications