சசிகலாவுடன் இன்று ஹைதராபாத் செல்கிறார் ஜெ.
சென்னை:
ஓய்வெடுப்பதற்காக தன் தோழி சசிகலாவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் செல்கிறார்.
ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று ஓய்வெடுக்கும் ஜெயலலிதா அங்கிருந்தே சில அதிரடிநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் 11ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இம்மாதம் 1ம் தேதி தமிழர் தேசிய இயக்கத்தலைவர் நெடுமாறன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட கைதுநடவடிக்கையை ஹைதராபத்திலிருந்தே ஜெயலலிதா மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனைக் கைது செய்தால் அவர் மிகவும் பிரபலமாகிவிடுவார் என்பதால் அதைத் தற்போதைக்கு ஒத்தி வைத்து விட்டு பாமக நிறுவனர் ராமதாஸை "பொடா"வின் கீழ்கைது செய்வது குறித்து ஜெயலலிதா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இதற்கிடையே மேம்பால ஊழல் குறித்த விசாரணைகளும் கிட்டத்தட்ட முழுவதுமாக முடிவடைந்து விட்ட நிலையில்திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் உள்ளிட்ட பலருடைய கைதுகளும்விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்திலிருந்து ஜெயலலிதாவின் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்காக சென்னையில் அதிகாரிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கருணாநிதி தன் குடும்பத்தினருடன் நேற்று தான் பெங்களூருக்கு ஓய்வெடுப்பதற்காகச் சென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ஜெயலலிதாவின் ஹைதராபாத் பயணம் இம்முறை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications