For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் மீண்டும் ரத்தக் களறி: 4 பேர் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ:

காஷ்மீரின் ரஜவுரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ரஜவுரி மாவட்டம் பாத்ரதா கிராமத்தில் நேற்று இரவு நுழைந்த சில தீவிரவாதிகள் அங்குள்ள ஒரு வீட்டுக்குள்திடீரென்று புகுந்தனர்.

புகுந்த வேகத்திலேயே துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கித் தீவிரவாதிகள் சராமாரியாகச் சுடஆரம்பித்தனர்.

இதில் அந்த வீட்டிலிருந்து 4 வயது மற்றும் 2 வயதுள்ள இரண்டு குழந்தைகளும் சுமார் 30 வயதுள்ள இரண்டுபெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டுத் தப்பியோடி விட்டனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X