For Quick Alerts
For Daily Alerts
Just In
நெடுமாறன் வீட்டிலும் சோதனை
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரித்ததாகக் கைது செயயப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் வீட்டிலும்இன்று க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனை நடத்தினர்.
வைகோவின் வீடு, அலுவலகம், மதிமுகவினரின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரெனநெடுமாறனின் சென்னை மயிலாப்பூர் வீட்டிற்கும் ஒரு போலீஸ் படை வந்தது.
சாய்பாபா கோவில் அருகே உள்ள அவரது வீட்டிலும் திடீர் சோதனை நடந்தது. ஆனால், அவரது வீட்டில் என்னகைப்பற்றப்பட்டது என்று உடனடியாகத் தெரியவில்லை. இந்தச் சோதனை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 1ம் தேதி இந்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நெடுமாறன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில் இந்தச் சோதனை நடந்துள்ளது.
Comments
Story first published: Wednesday, July 24, 2002, 5:30 [IST]