துணை ஜனாதிபதி தேர்தல்: வைகோ டெல்லி செல்ல அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லி செல்ல சென்னைஉயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற எம்.பிக்கள் மட்டுமே இதில்வாக்களிக்க முடியும்.

0இந்நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகாசிஎம்.பியுமான வைகோ துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து என்னுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே தீருவேன் என்றும்அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

இதற்காக வைகோ டெல்லி செல்வதற்கு அனுமதி கோரி அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று காலை நீதிபதி கனகராஜ் விசாரித்தார். வைகோவின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில்,

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம். ஆனால்வைகோ அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.

எனவே அவரை டெல்லி சென்று வாக்களிப்பதற்காக அனுமதிக்க வேண்டும்.

வரும் 12ம் தேதி காலையில் அவர் டெல்லி சென்று வாக்களித்து விட்டு அன்று மாலையிலேயே மீண்டும் சிறைக்குத்திரும்பி விடுவார் என்று வைகோவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து இம்மனுவின் தீர்ப்புஇன்று மாலை வழங்கப்படும் என்று நீதிபதி கனகராஜ் தெரிவித்தார்.

அதன்படி இன்று மாலை நீதிபதி கனகராஜ் தீர்ப்பு வழங்கினார். வரும் 12ம் தேதி காலையில் டெல்லிக்குவிமானத்தில் சென்று துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து விட்டு அன்று மாலையே வைகோ திரும்பவேண்டும் என்றும் இதற்கு தமிழக போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+