துணை ஜனாதிபதி தேர்தல்: வைகோ டெல்லி செல்ல அனுமதி
சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லி செல்ல சென்னைஉயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற எம்.பிக்கள் மட்டுமே இதில்வாக்களிக்க முடியும்.
0இந்நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகாசிஎம்.பியுமான வைகோ துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து என்னுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே தீருவேன் என்றும்அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
இதற்காக வைகோ டெல்லி செல்வதற்கு அனுமதி கோரி அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று காலை நீதிபதி கனகராஜ் விசாரித்தார். வைகோவின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில்,
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம். ஆனால்வைகோ அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.
எனவே அவரை டெல்லி சென்று வாக்களிப்பதற்காக அனுமதிக்க வேண்டும்.
வரும் 12ம் தேதி காலையில் அவர் டெல்லி சென்று வாக்களித்து விட்டு அன்று மாலையிலேயே மீண்டும் சிறைக்குத்திரும்பி விடுவார் என்று வைகோவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கு அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து இம்மனுவின் தீர்ப்புஇன்று மாலை வழங்கப்படும் என்று நீதிபதி கனகராஜ் தெரிவித்தார்.
அதன்படி இன்று மாலை நீதிபதி கனகராஜ் தீர்ப்பு வழங்கினார். வரும் 12ம் தேதி காலையில் டெல்லிக்குவிமானத்தில் சென்று துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து விட்டு அன்று மாலையே வைகோ திரும்பவேண்டும் என்றும் இதற்கு தமிழக போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications