இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறார் வைகோ
சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க டெல்லி செல்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேலூர்மத்திய சிறையிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்னை கொண்டு வரப்படுகிறார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தன்னை டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார்.
அதை ஏற்ற உயர் நீதிமன்றம் வைகோவை டெல்லிக்குக் கொண்டு செல்ல தமிழகப் போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை வேலூர் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைகோ சென்னைகொண்டு வரப்படுகிறார். இன்று இரவு அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.
நாளை காலை அவர் டெல்லி அழைத்துச் செல்லப்படுகிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துமுடித்தவுடன் மாலையில் அவர் மீண்டும் சென்னை அழைத்து வரப்பட்டு அதன் பின்னர் வேலூர் கொண்டுசெல்லப்படுவார்.












Click it and Unblock the Notifications