டெல்லியில் போலீஸ் ஜீப்பில் சென்ற வைகோ
சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (திங்கள்கிழமை)காலை விமானத்தில் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.
டெல்லியில் வாக்களிக்க வந்திருந்த எம்.பிக்களும் மத்திய அமைச்சர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.அதே போல வைகோவைப் படம் எடுக்க பத்திரிக்கை போட்டோகிராபர்கள் இடையே பெரும் தள்ளுமுள்ளு நடந்தது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோ, டெல்லி சென்று துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் வேலூரில் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று காலை அவர் பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன்தமிழக போலீஸ் அதிகாரிகளும் டெல்லி சென்றுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் வைகோவைப் பார்க்க ஏராளமான மதிமுகவினர் கூடிவிட்டனர். அவர்கள்வைகோவைப் பார்த்தவுடன் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
வழியில் யாருக்கும் அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சென்னை விமானநிலையத்தில் வைகோ பேட்டியளிக்கவில்லை. அதே போல கட்சியினருடனும் அவர் பேசவில்லை.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார் வைகோ.
டெல்லி சென்று இறங்கியதும் அந்த மாநில அரசின் போலீஸ் ஜீப் மூலம் அவரை போலீசார் நாடாளுமன்றக் கட்டடத்துக்குக்கொண்டு சென்றனர்.
நாடாளுமன்ற வாயிலில் அவரை மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் வரவேற்று அழைத்துச் சென்றார். வைகோவிடம்பத்திரிக்கை நிருபர்களும் டிவி நிருபர்களும் தொடர்ந்து கேள்விகள் கேட்டனர். ஆனால், உடன் இருந்த மகாஜன் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை சுட்டிக் காட்டி வைகோவால் பேட்டி தர முடியாது என விளக்கினார்.
இதன் பின்னர் வைகோ வாக்களித்தார்.
வைகோ நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன் பிரமோத் மஜானிடம் நிருபர்கள் பேசினர். அப்போது அவரிடம் வைகோஎப்போது வருவார்? எப்போது வாக்களிப்பார் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த மகாஜன், ஜெயிலுக்கு போவது மிக எளிது..வெளியே வருவது மிகவும் கடினம் என பதிலளித்தார்.
வைகோ இன்று மாலையே மீண்டும் சென்னை அழைத்து வரப்படுவார். பின்னர் உடனடியாக அவர் வேலூர்கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அங்கு சிறையில் வைக்கப்படுவார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications