For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடையை எதிர்த்து வழக்கு: நெடுமாறன் கட்சி முடிவு

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின்பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கூறினார்.

ஹைதராபாத்திலிருந்து நேற்று மாலை சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர் தேசிய இயக்கம்தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனும் அதன் உறுப்பினர்களும் 1908ம் ஆண்டு குற்றவியல்சட்டத் திருத்தச் சட்டத்தின் கீழ் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால்அவ்வியக்கத்தைத் தடை செய்துள்ளதாகவும் ஜெயலலிதா கூறினார்.

கடந்த 8ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு, மேலேகூறப்பட்ட சட்டத்தின் கீழ் தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் ஜெயலலிதாதெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்தத் தடை நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக வீரபாண்டியன்நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டது தொடர்பாக எங்களுக்கு இன்னும் என்தத் தகவலும் வரவில்லை.அந்த விவரங்கள் வந்ததும் சட்டப்பூர்வமாக இந்தப் பிரச்சனையை எதிர் கொள்வோம்.

தமிழர்களின் உரிமையைப் பறிக்கும், கருத்துரிமையை பறிக்கும் செயல் இது. தமிழக அரசின் இந்தநெருக்குதல்களுக்கு பணிந்துவிட மாட்டோம் என்றார் வீரபாண்டியன்.

கடந்த 1979ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய நெடுமாறன் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்த அமைப்பு தான் பின்னர் 1988ம் ஆண்டு தமிழர் தேசிய இயக்கம் என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

வீரபாண்டியன் தவிர, கே. சவுந்திரராஜன் மற்றும் கே. பரந்தாமன் ஆகியோரும் தமிழர் தேசிய இயக்கத்தின்பொதுச் செயலாளர்களாக உள்ளனர்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X