ரணிலுக்கு சந்திரிகா புதிய முட்டுக்கட்டை
கொழும்பு:
நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புதியபிரச்சனையை உருவாக்கியுள்ளார்.
தனது திட்டங்களுக்கு சந்திரிகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரது அதிகாரத்தைக் குறைக்க ரணில் முடிவு செய்துள்ளார்.இதை சந்திரிகா ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைத் தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத்கைக் கலைக்க அரசு பரிந்துரைத்தாலும் கூட அதை ஏற்க மாட்டேன் என சந்திரிகா இப்போது புதிய மிரட்டல்விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்றத்தைக் கலைக்கச் சொல்லி பிரதமரும் அரசும் பரிந்துரை தான் செய்யலாம். அதை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம்அதிபருக்கு இல்லை என்றார்.
இதன்மூலம் இடைத் தேர்தலைச் சந்திக்கவும் ரணிலுக்கு சந்திரிகா முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
பெரிஸ் மேலும் கூறுகையில், அதிகாரக் குறைப்பை அதிபர் ஏற்கத் தயாராக இல்லை. அதே நேரத்தில் புலிகளுடன் பேச்சு நடத்தவோ,அமைதி முயற்சிகளுக்கோ அதிபர் இடைஞ்சலாக இருக்க மாட்டார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவின் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துடன் அமைச்சர் மிலிந்த மொரகொடா பேச்சு நடத்துவதைஅதிபர் வரவேற்கிறார். முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளையும் சந்திரிகா ஆதரித்தார். அதைப் போலவே இதையும் ஆதரிக்கிறார்.
ஆனால், பேச்சுவார்த்தைகளில் எல்லா விஷயமும் பேசப்பட வேண்டும். மனித உரிமைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.இடைக்கால நிர்வாகம், புலிகளுக்கு அதிகாரம் குறித்து மட்டும் பேசாமல் மற்ற விவகாரங்களையும் பேச வேண்டும். புலிகளின்தலைமையில் அமையும் அரசில் ஜனநாயக உரிமைகள் இருக்க வேண்டும் என்று அதிபர் விரும்புகிறார்.
அதிபருக்கும் பிரதமருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய லட்சுமண் கதிர்காமர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.அதே நேரம் பிரதமரை நேரில் சந்திக்கும் திட்டம் ஏதும் அதிபர் சந்திரிகாவுக்கு இல்லை என்றார் பெரிஸ்.
நார்வே சென்றார் மொரகொடா:
இந் நிலையில் ஆண்டன் பாலசிங்கத்தை நேரில் சந்தித்துப் பேச நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு அமைச்ச் மொரகொடா புறப்பட்டுச்சென்றார். தாய்லாந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து இருவரும் பேசவுள்ளனர்.












Click it and Unblock the Notifications