தியேட்டர் கட்டண நிர்ணயம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது முதலில் சில வாரங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் ராஜ் என்பவர் இந்த பொது நல வழக்கைத் தொடர்ந்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:
தியேட்டர் உரிமையாளர்களே டிக்கெட் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அனுமதியால் ஏழைகள்சுரண்டப்படுவார்கள். அரசின் இந்த முடிவு ஏழை மக்களுக்கு எதிரான. தன்னிச்சையானது. எனவே, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுபஷன்ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதுகுறித்து 3 வாரத்தில் பதில் அனுப்புமாறு தமிழக உள்துறைச் செயலாளருக்கும் வணிகவரித்துறைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.