வந்தவாசி அருகே ஈவ் டீசிங் செய்தவர்களை தட்டிக் கேட்டவர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
வந்தவாசி
வந்தவாசி அருகே மாணவியைக் கேலி செய்தவர்களைத் தட்டிக் கேட்ட ஒரு நபர் படுகொலை செய்யப்பட்டார்.
வந்தவாசி அருகே ஒரு கிராமத்தில் 8வது வகுப்பு மாணவி ஒருவரை சில இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்துகொண்டிருந்தனர்.
இதை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவர் கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அந்த நபரைக் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications