வருகிறது "இயற்கை சுற்றுலா" திட்டம்
ஊட்டி:
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் "இயற்கைச் சுற்றுலா" என்ற புதியதிட்டம் அறிமுகப்படுத்தபடவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் கூறியுள்ளார்.
ஊட்டியில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக"இயற்கைச் சுற்றுலா" என்ற பெயரில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற இயற்கை வாசஸ்தலங்களை அடிப்படையாக வைத்து இந்தத் திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதலுக்காக இந்தத் திட்டத்தை சுற்றுலா வளர்ச்சித் துறை அனுப்பி வைத்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும்இது நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு மலைகள் ஆண்டாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மலை வாசஸ்தலங்களில் சுற்றுலாவளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு பிற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள்நிறைவேற்றப்படும் என்றார் மில்லர்.












Click it and Unblock the Notifications